மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று – வகுப்புகள் ஆன்லைன் முறைக்கு மாற்றம்! பீதியில் மக்கள்!
கொரோனா தொற்று பல நாடுகளில் குறைந்து வரும் வேளையில் சீனாவில் மட்டும் கொரோனா நாளுக்கு நாள் பல மடங்காகப் பெருகிக் கொண்டே செல்கிறது. இதனால் மீண்டும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறைக்கு வகுப்புகள் மாற்றப்படுகின்றன.
கொரோனா தொற்று:
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி பல லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசின் பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரித்தது. மேலும், பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றும் படியும், மக்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டது.
அவசியமில்லாமல் பொது இடங்களுக்கு மக்கள் வருவதை தவிர்த்து கொள்ளும்படியும், அத்தியாவசியமான பொருட்கள் வாங்க மட்டுமே வீட்டை விட்டு வெளியேறி வரும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் ஓரளவுக்கு பின்பற்றியதால் தான் பல நாடுகளிலும் கொரோனா தொற்று கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிலையில் சீனாவின் வர்த்தக தலைநகரமான ஹாங்காய் நகரில் கொரோனா அதிக அளவில் உயர்ந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை மட்டுமே புதிதாக 26 ஆயிரத்து 87 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 914 பேர் அறிகுறியே இல்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – TDS தொடர்பான புதிய விதிகள்!
ஹாங்காய் நகரில் கிட்டத்தட்ட 2.6 கோடி மக்கள்தொகை இருப்பதால் அந்த நகரத்தில் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் கடந்த மூன்று வாரங்களாக போடப்பட்டு வருகிறது. இதன்பிறகு 1.8 கோடி மக்கள் தொகை கொண்ட குவாங்சோ நகரில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திங்கட்கிழமை மட்டுமே புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்டாய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு மக்கள் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கொரோனா தொற்று பரவி விடுமோ என மக்கள் பீதியில் உள்ளனர்.