மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதையடுத்து அரசு ஊழியர்களுக்கு HRA-ஐ அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பாக விவரங்களை பார்ப்போம்.

வீட்டு வாடகைப்படி

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் கடந்த 2020ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைத்தது. இதையடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டு கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 11% அதிகரிக்கப்பட்டு 28% வழங்கப்பட்டது. இதனை மேலும் ஜூலை மாதத்தில் 3% உயர்த்தி வழங்கியது. அதன்படி 31% அகவிலைப்படியை பெற்று வந்தனர். இதையடுத்து அகவிலைப்படி ஒவ்வொரு ஆண்டும் இரு முறை வழங்கப்படும்.

இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

அதன்படி இந்த ஆண்டுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அமைச்சரவை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இப்போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக உயர்ந்துள்ளது. இதனால் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 73 கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிடங்கள் – ஏப்ரல் 22 நேர்முகத்தேர்வு!

மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு கடந்த ஜூலை 2021ம் ஆண்டு வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் அகவிலைப்படி 25% ஆக இருந்தது. இதனை மேலும் 3% அதிகரித்தது அத்துடன் தற்போது அகவிலைப்படி 34% உயர்த்தி உள்ளதால் வீட்டு வாடகைப்படி (HRA) உயர்வு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானால் ஊழியர்களின் சம்பளமும் கணிசமாக உயரும் என்று கூறப்படுகிறது. அதனால் இந்த அறிவிப்புக்காக ஊழியர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். அத்துடன் அரசின் முந்தைய அறிவிப்பின்படி, ஊழியர்களின் அகவிலைப்படி 50%க்கும் மேல் இருந்தால் வீட்டு வாடகைப்படி (HRA) 30%, 20%, 10% என்று வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!