தமிழகத்தில் அரிசி விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அவதி!

0
தமிழகத்தில் அரிசி விலை திடீர் உயர்வு - பொதுமக்கள் அவதி!
தமிழகத்தில் அரிசி விலை திடீர் உயர்வு - பொதுமக்கள் அவதி!
தமிழகத்தில் அரிசி விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அவதி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும்நிலையில் அரிசியின் விலையும் கிலோவுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அரிசி விலை உயர்வு:

தமிழகத்தில் எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு தற்போது ஜூலை மாதத்திலேயே பருவமழை துவங்கிவிட்ட நிலையில் அத்தியாவசிய தேவை பொருட்கள் அனைத்தும் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தக்காளியின் விலை ரூபாய் 100 முதல் 130 வரையிலும், சின்ன வெங்காயம் கிலோவுக்கு ரூபாய் 220 வரையிலும், கேரட், பீன்ஸ், இஞ்சி என அனைத்து விலையும் இரட்டிப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இது மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளின் கொள்முதலும் தற்போது குறைந்திருப்பதால் துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் விலையும் தாறுமாறாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், தமிழகத்தில் தற்போது அரிசியின் விலையும் கிலோவுக்கு ரூபாய் 10 உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

IT ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது – பிரபல நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!

இந்நிலையில், பொதுமக்களில் நலன் கருதி இன்று தமிழகம் முழுவதும் உள்ள 300 ரேஷன் கடைகளின் வாயிலாக தக்காளி விற்பனை செய்ய இருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் அரசு கண்டிப்பாக இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்..

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!