ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி கடைகளில் ‘செறிவூட்டப்பட்ட அரிசி’!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - இனி கடைகளில் 'செறிவூட்டப்பட்ட அரிசி'!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - இனி கடைகளில் 'செறிவூட்டப்பட்ட அரிசி'!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி கடைகளில் ‘செறிவூட்டப்பட்ட அரிசி’!

நாடு முழுவதும் மக்களின் நலன் கருதி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஊட்டச்சத்து நிறைந்த வகையில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஊட்டச்சத்து பொருட்கள்:

நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நியாயவிலை கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. அதாவது இதுவரை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி அவர்கள் ஒரே நாடு ஒரே கார்டு என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – தகுதி பெறாதவர்கள் பட்டியல்! முக்கிய அறிவிப்பு!

அதாவது இந்த திட்டத்தின் மூலம் மக்கள் அனைவரும் நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் அங்கு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் தற்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஊட்டச்சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் இந்திய உணவு தர கட்டுப்பாட்டாக ஆய்வகத்தை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே திறந்து வைத்துள்ளார்.

தமிழகத்தில் நாளை (நவ.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அப்போது அமைச்சர் நாடு முழுவதும் ஊட்டச்சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி நியாய விலை கடைகள் மற்றும் வெளிச்சந்தைகளில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறினார். அதாவது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வகையில் சாதாரண அரிசியில் துத்தநாகம், வைட்டமின் பி 12 மற்றும் இரும்பு சத்து உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துக்களை சேர்த்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வரும் 2024 க்குள் செய்து முடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!