தமிழகத்தில் நாளை (நவ.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மின்பராமரிப்பு பணிகளுக்கான அறிவிப்பு முன்கூட்டியே குறிப்பிட்ட மின்வாரிய செயற்பொறியாளரால் வெளியிடப்படும்.
நாளை மின்தடை:
தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாவட்ட வாரியாக மின்பராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மின்பராமரிப்பு பணிகளானது எதிர்காலத்தில் தடையில்லா மின்சாரம் மக்களுக்கு வழங்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தற்போது நிகழ்ந்து வரும் எதிர்பாராத மின்விபத்துகளை தடுக்கும் வகையிலும் இந்த பராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மின்பராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
‘டிக் டாக்’ வினுஷா தேவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கண்ணம்மா ஆன கதை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
அவ்வாறு மின்தடை செய்யப்படுவதனால் மக்களின் நலன் கருதி மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பகுதிகளின் விபரங்கள் அந்த குறிப்பிட்ட மின்வாரியத்தால் செய்திக்குறிப்பு அல்லது சமூக வலைத்தளம் மூலம் தெரிவிக்கப்படும். அந்த வகையில் நாளை நவம்பர் 23 ம் தேதி எரியோடு பகுதியை அடுத்துள்ள கோவிலூர் துணைமின் நிலையத்தில் மிபராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக அப்பகுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் ஜே.விஜய் செய்திக்குறிப்பின் மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு!
அதன்படி கோவிலூர் துணைமின் நிலையத்தின் கீழ் பயன்பெறும் ஆர்.கோம்பை, புளியம்பட்டி, வடுகம்பட்டி, குஜிலியம்பாறை, ஆர்.புதுக்கோட்டை, பில்லமநாயக்கன்பட்டி, கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. மேலும் உசிலம்பட்டி, குளத்துப்பட்டி, வள்ளிப்பட்டி, சத்திரப்பட்டி, ஆர்.வெள்ளோடு, சின்னலுப்பை, குவாரி ஆகிய அனைத்து பகுதிகளிலும் நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.