தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – தகுதி பெறாதவர்கள் பட்டியல்! முக்கிய அறிவிப்பு!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - தகுதி பெறாதவர்கள் பட்டியல்! முக்கிய அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - தகுதி பெறாதவர்கள் பட்டியல்! முக்கிய அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – தகுதி பெறாதவர்கள் பட்டியல்! முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தின் மூலம் சலுகை பெறாதவர்கள் பெயர் பட்டியலை சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் அனைவரும் அறிந்து கொள்ளும் படி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் நகைக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் தான். அரசு தலைமையேற்ற பின், இந்த திட்டம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. ஆனால் தமிழக அரசு அனைத்து கூட்டுறவு சங்கங்களில் இருக்கும் நகைக்கடன்களையும் ஆய்வு செய்து, உரிய ஆலோசனை செய்யப்பட்டு, நகைக்கடன் தள்ளுப்படி குறித்த அரசாணையை சமீபத்தில் வெளியிட்டது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 4 மாத DR தொகையுடன் கூடுதல் சலுகை? முழு விவரம் இதோ!

அதன்படி, அரசு அறிவித்துள்ள நிபந்தனைகளின் கீழ் வகைப்படுத்தப்படும் நகைக்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று ஆணை வெளியிடப்பட்டது. மேலும், கூட்டுறவு சங்க நகைக்கடன்களில் பல கோடிக்கும் அதிகமாக மோசடிகள் நடந்துள்ளதும் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரி எதிரேயுள்ள சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தினர் அரசின் நகைக்கடன் தள்ளுபடி குறித்து குறிப்பிட்ட வங்கியின் உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை (நவ.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் சங்க கட்டிடத்தின் வாயிலில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் கிடையாது என்பது குறித்த பெயர் பட்டியலை ஒட்டி வைத்துள்ளனர். இந்த பெயர் பட்டியலை பார்த்து அனைவரும் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று கூட்டுறவு சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த பட்டியலின் படி, சிதம்பரம் தலைமை அலுவலகத்தில் 684 பேரும், காட்டுமன்னார்குடி கிளை அலுவலகத்தில் 954 பேரும் என மொத்தம் 1638 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!