தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – வருவாய்த்துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - வருவாய்த்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - வருவாய்த்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – வருவாய்த்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை தமிழக வருவாய்த்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தகுதி உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வருவாய் துறையில் வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு மிகவும் கட்டுப்பாடான நிலையில் இருந்தது. ஆனாலும் மாணவர்களின் படிப்புக்கு கேடு வந்து விடக் கூடாது என்று இணையதளம் மூலம் ஆன்லைனில் பாடங்களை நடத்தி வந்தது. இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்ததால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப் பட்டது. சென்ற வருடம் பொதுத் தேர்வுகள் நடைபெறாத காரணத்தால் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று கூறி அதன் தேதியையும் அறிவித்து உள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. அரசு சார்பிலும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தேர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. TNPSC சார்பில் குரூப் 2, 2A மற்றும் குரூப் 4, VAO தேர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தவிர தனியார் துறையும் தங்கள் சார்பில் வேலைவாய்ப்புகளை தெரிவித்து வருகிறது.

MI vs CSK போட்டிக்கான ஒரு முன்னோட்டம் – வெற்றி கணக்கை துவங்குமா மும்பை? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இந்நிலையில் தற்போது திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மே மாதம் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பணியிடத்தின் பெயர் அலுவலக உதவியாளர் (Office Assistant) என்றும், காலியிடங்களின் எண்ணிக்கை 24 என்றும் அறிவித்து உள்ளனர். மேலும் கல்வித்தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

இது தவிர கல்வித் தகுதியாக 8 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். மேலும் சம்பளமாக ரூ 15,700 முதல் 50,000 வரை வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளனர். வயதுத் தகுதியாக 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இருப்பினும் அரசு விதிகளின் படி, SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், BC/MBC/DNC பிரிவுகளுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகளும் உள்ளது என்றும் கூறியுள்ளனர். இதனை விண்ணப்பிக்கும் முறையாக, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/04/2022041367.pdf என்ற இணையதள தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பித்து மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அ-பிரிவு, அறை எண் 224. இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பல்லடம் ரோடு திருப்பூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!