தமிழகத்தில் அரசு பள்ளி தொழிளார்களுக்கான ஓய்வு அறிவிப்பு – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் நடப்பாண்டில் ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டால் அவர்கள் இந்த ஆண்டு இறுதி வரை பணியாற்ற வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் கார்த்திக் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அரசாணை வெளியீடு:
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் கார்த்திக் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2022ம் ஆண்டு ஜூன் வெளியான அரசு உத்தரவின்படி, அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 2022-23ம் ஆண்டின் இறுதி வரையில் தங்கள் பணியை தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கடந்த 2022 ஜூலை மாதம் பிற்பட்டோர் நலத்துறையின் ஆணையர் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் அரசுப்பணியாளர்கள் ஓய்வுபெறும் வயதை 58ல் இருந்து 59 ஆக உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது. அதனால் 31.5.2020 வரை பணியில் உள்ளவர்கள் ஓய்வு பெறுவதாக இருந்தால் 59 வயதையும் தாண்டி 60 வயது வரை பணியாற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ‘இதனை’ மீறினால் நடவடிக்கை!
மேலும் ஆசிரியராக இருந்து கொண்டு விடுதிக் காப்பாளர்களாக இருப்பவர்களும், ஆசிரியராக இருந்து கொண்டே விடுதியின் பெண் காப்பாளர்களாக இருப்பவர்களும், இடைநிலை, காப்பாளர்கள், இடைநிலை பெண் காப்பாளர்களும் தங்கள் பணியில் இருந்து இடையில் ஓய்வுபெறும் நிலை ஏற்பட்டால் அவர்களும் அந்த ஆண்டின் இறுதி வரை பணியாற்றுவதற்கான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதன்படி கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டால் அவர்கள் தங்கள் பணியை அந்த கல்வி ஆண்டின் (2022-23) இறுதி வேலைநாள் வரை பணியாற்றலாம் என்று அரசு ஆணையிடுவதாக அரசாணையில் தெரிவித்துள்ளார்.