ஓய்வு பெறும் TNPSC இன் தலைவர் க.பாலச்சந்திரன் – புதிய தலைமை யார்? முழு விபரம் இதோ!
தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவராக க.பாலச்சந்திரன் உள்ளார். தற்போது 62 வயதை எட்டியுள்ளதால் இவர் இப்பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இப்போது அடுத்ததாக யார் இந்த பதிவியில் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரத்தை பார்ப்போம்.
புதிய தலைவர்:
தமிழகத்தில் அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் தகுதியான நபர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அரசு பதவிகளின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக க.பாலச்சந்திரன் அவர்கள் பொறுப்பேற்றார். இவர் அருள்மொழி ஐஏஎஸ் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைவர் நியமனம் தேவைப்பட்டபோது நியமிக்கப்பட்டார்.
Exams Daily Mobile App Download
TNPSCயின் தலைவராக நியமிக்கப்படுபவா் 62 வயது அல்லது 6 ஆண்டுகள் வரை என இரண்டில் ஒரு காரணத்திற்காக பதவியில் இருந்து ஓய்வு பெறுவார். இதில் முதலில் எது வருகிறதோ அதுவரை அவர் இப்பதவியில் இருப்பார். அதன்படி தற்போது க.பாலச்சந்திரன் அவர்கள் 62 வயதை அடைந்துள்ளார். அதனால் வருகிற ஜூன் 9ம் தேதி அன்று ஓய்வு பெற உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக இவர் இப்பதவியில் இருந்துள்ளார். இதையடுத்து கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து TNPSCயின் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார்.
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு…!
அத்துடன் குரூப் 2, 2ஏ தேர்வை அறிவித்தபடி நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து TNPSCயின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி தற்போது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் யாரேனும் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பணியில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பதிலாக பணியில் உள்ள நேர்மையான மற்றும் திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி இனி நடைபெறும் தேர்வுகள் நேர்மையானதாக நடைபெறுமா என்று பார்ப்போம்.