ஆகஸ்ட் 11 வரை கோவில்களில் பக்தர்களுக்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல மாவட்ட ஆட்சியர் அவர்கள் தடை விதித்துள்ளார்.
பக்தர்களுக்கு தடை:
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த மாதத்தில் குறைந்து வந்தது. இதனால் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து மீண்டும் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது அடுத்த முழு பொது முடக்கத்திற்கு வித்திடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. அதனை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
HDFC வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பினால் சர்ச்சை – 2021 பேட்ச் மாணவர்களுக்கு மறுப்பு?
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடி 18ம் பெருக்கு, ஆடி அமாவாசை, கிருத்திகை போன்ற விசேஷ நாட்களை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும். இது தொற்று பரவலை அதிகப்படுத்த வாய்ப்பை வழங்கும் என்பதால் மாவட்ட நிர்வாகங்கள் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியை மறுத்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவில், திருத்தணி போன்ற கோவில்களில் பக்தர்கள் தரிசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். ஆகஸ்ட் 11 வரை வழிபாட்டு தலங்களில் விலங்குகள் பலியிடுதல், நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல், திருவிழாக்கள் நடத்துதல், தேரோட்டம், ஜெப கூட்டங்கள் நடத்துதல், தொழுகைகள் செய்தல் போன்றவைகள் நடைபெற கூடாது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மக்கள் செயல்பட வேண்டும். தடுப்பு விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.