HDFC வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பினால் சர்ச்சை – 2021 பேட்ச் மாணவர்களுக்கு மறுப்பு?
கொரோனா பேரலை காரணமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதான வேலையில், இம்மாணவர்கள் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல என்று HDFC வங்கியின் வேலை வாய்ப்பு விளம்பரங்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி வேலைவாய்ப்பு:
கொரோனா பேரலையால் உலக நாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில் தொழில்துறை நிறுவனங்களை பொருத்தளவு பணியாளர்கள் பலரும் வீடுகளில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். கல்வி நிறுவனங்களும் மாணவர்கள் வீடுகளில் இருந்து பாடங்களை கற்பிக்கும் முறைகளை அறிமுகப்படுத்தியது. இதனிடையே இந்த 2 ஆண்டுகளிலும் பொதுத் தேர்வுகளை எழுத இருந்த மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மதிப்பெண்கள் மட்டும் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ஆன்லைனில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) – ஏற்பாடுகள் தீவிரம்!
இம்மாணவர்களது எதிர்காலத்தை கடந்த 18 மாத காலங்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தேர்வு முடிவுகள், கல்லூரி சேர்க்கைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் போன்ற கடுமையான சூழலை இவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனிடையே 2020 மற்றும் 2021 கல்வியாண்டுகளில் ஆன்லைனில் படித்த மில்லியன் கணக்கான மாணவர்கள் சிறந்த கல்வியை பெறவில்லை என குறிப்பிடப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், புதிய பட்டதாரிகள் தங்கள் தொழிலுக்கான வாய்ப்புகள் குறித்து கவலையும், சந்தேகமும் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் HDFC வங்கியின் புதிய வேலை வாய்ப்புகளில் 2021 ஆம் ஆண்டில் படித்த மாணவர்களை தகுதியுடையவர்கள் அல்ல என நிராகரித்து ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளது. அதாவது HDFC வங்கியின் மதுரை கிளையில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறும் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுகளை இந்த விளம்பரம் அறிவித்தது. நேர்காணலுக்கான இடம் மற்றும் வேலை செய்யும் இடமும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆனால் வயது அளவுகோல்களுக்குக் கீழ், 2021 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியற்றவர்கள் என குறிப்பிட்டுள்ளது. இது பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது தெரியாமல் ஏற்பட்ட எழுத்துப் பிழை என்றும் அதற்கு வருந்துவதாகவும், பட்டதாரிகள் வயது வரம்பை பூர்த்தி செய்யும் வரை தேர்ச்சி பெற்ற ஆண்டைப் பொருட்படுத்தாமல் விண்ணப்பிக்கலாம் என்று HDFC வங்கி தற்போது விளக்கம் கொடுத்துள்ளது.