தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு – முதல்வர் விளக்கம்!
தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு:
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் குறிப்பிட்ட விழுக்காடு இட ஒதுக்கீடு அரசால் வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாக வன்னியர் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன் வரைவு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இரு மடங்கு லாபம் தரும் மத்திய அரசின் சேமிப்பு திட்டம்!
அதன் பிறகு இந்த இட ஒதுக்கீடு தாற்காலிகமானது என பலர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த இட ஒதுக்கீடு தற்காலிகமானது எனவும், 6 மாதத்திற்கு பின்னர் சாதி வாரியாக புள்ளி விவரங்கள் அடிப்படையில் இடஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும் எனவும், சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து தமிழகத்தில் 3-வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.