இரு மடங்கு லாபம் தரும் மத்திய அரசின் சேமிப்பு திட்டம்!
மிக குறைந்த முதலீடுகளில் இருந்து கூட இரு மடங்கு லாபம் பெறக்கூடிய வகையில் உள்ள மத்திய அரசின் அஞ்சலக சேமிப்பு திட்டம் பற்றி இந்த பதிவில் காண்போம்.
அஞ்சலக திட்டம்:
தபால் நிலையங்கள் மூலம் நாட்டு மக்கள் அதிக பலன்களை அடையும் வகையில் மத்திய அரசு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி கணக்கு போன்று அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்குகள் தொடங்கவும், கணக்கில் இருந்து எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்வதற்கு ATM போன்ற வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் மிக குறைந்த அளவிலான முதலீடுகளை செய்வதற்கும் மத்திய அரசு பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அமல்!
மேலும், இந்த திட்டங்களின் மூலம் இருமடங்கு வரையிலான லாபங்களை அடையவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 3 வருட வைப்பு நிதிக்கு 5.50% வட்டியும், 3 முதல் 5 வருட வைப்பு நிதிக்கு 6.70% வட்டியும் வழங்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகும். 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடுகளுக்கு 80 c பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
இந்த திட்டங்களில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் டெபாசிட் செய்யலாம். 5 ஆண்டு திட்டத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்களில் உங்களது முதலீடு தொகை இரட்டிப்பாக கிடைக்கும். முகம் தெரியாத, நிரந்தரம் இல்லாத தனியார் நிதி நிறுவனங்களிடம் பணத்தை முதலீடு செய்து இழப்பதை விட, அரசின் சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பலனடைந்து கொள்வது தான் சிறந்த வழியாகும்.