தமிழக மின் வாரியத்தில் காலிப்பணியிடம் நிரப்பல் – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் மின்வாரியத்தில் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனை தொடர்ந்து, இந்த காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்று மின்கழக தொமுச கோரிக்கை வைத்துள்ளனர்.
மின்வாரியம் காலிப்பணியிடங்கள்
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSC தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக மின் வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதன் தொடர்ச்சியாக மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் மின்வாரியத்தில் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.
அதனால் பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் பொருட்டு இந்த காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்களிடம் கோரிக்கை பெறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இது தொடர்பாக தொமுச மின்வாரிய இயக்குனருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை வைத்துள்ளார். இவர் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் மின்பகிர்மான வட்டங்களை நிர்வாக ரீதியாக பிரிக்க நடவடிக்கை மேற்கொள்ள தொடங்கும் முன்பாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD விகிதம் உயர்வு!
இதனை தொடர்ந்து காலியாக உள்ள 56,000 பணியிடங்கள் விரைவில் நிரப்ப வேண்டும். இதனால் பணியாளர்கள் மற்றும் பொறியாளர்களின் பணிச்சுமை குறையும் என்று கூறியுள்ளார். மேலும் படித்த இளைஞர்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே பணியிடத்தில் ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளதால் புதிய பதவிகள் ஏதும் உருவாக்கக்கூடாது என்று வெளியிடப்பட்ட அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்