தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி அரசு பொது விடுமுறை – முதல்வரிடம் கோரிக்கை மனு!

0
தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி அரசு பொது விடுமுறை - முதல்வரிடம் கோரிக்கை மனு!
தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி அரசு பொது விடுமுறை - முதல்வரிடம் கோரிக்கை மனு!
தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி அரசு பொது விடுமுறை – முதல்வரிடம் கோரிக்கை மனு!

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 4ம் தேதி அய்யா வைகுண்டர் உதய தினம் கொண்டாட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கனிமொழி எம்.பி.யிடம் சாமிதோப்பு பாலஜனாதிபதி கோரிக்கை வைத்துள்ளார்.

பொது விடுமுறை:

தமிழகத்தில் சிறப்பு பண்டிகை, திருவிழாக்கள், தியாகிகளின் நினைவு நாள் போன்ற முக்கியமான திங்களுக்கு பொது விடுமுறை அளிப்பது என்பது வழக்கம். அந்த நாளில், பண்டிகைகளை சிறப்பிக்கும் விதமாக இந்த விடுமுறைகள் அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் அய்யா வைகுண்டர் உதய தினமான (மாசி மாதம் 20) மார்ச் 4ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மேலும் அய்யா வைகுண்டர் தாழ்த்தப்பட்ட இன மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க போராடியவர்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் திருத்தம்!

அத்துடன் தமிழகத்தில் சாதிக் கொடுமைகளை எதிர்த்து போராடியவர்களுள் முக்கிய நபர் இவர். ‘தற்காப்பதுவே தாமம்‘ என்கிற நிலையில் அனைத்து சாதி மக்களையும் ஒன்றிணைத்தார் அய்யா வைகுண்டர். மேலும் ஆண்கள் தலையில் தலைப்பாகையுடன் வழிபட அனுமதித்து ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதை நிரூபித்தார். அதனால் இவரை தமிழக மக்கள் வணங்கி வருகின்றனர். மேலும் வருடம் தோறும் தமிழகம் முழுவதும் அய்யா வைகுண்டர் திருநாள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோவையை தட்டி தூக்கிய திமுக, முடிவு வெளியான அனைத்து இடங்களிலும் வெற்றி – தொண்டர்கள் உற்சாகம்!

அய்யா வைகுண்டருக்கு கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் கோவில் அமைந்துள்ளது. மேலும், சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கில் அய்யா வைகுண்டர் வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்நிலையில் அய்யா வைகுண்டர் உதய தினமான மாசி மாதம் 20ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த திருநாளை அனைத்து மாவட்டத்தினரும் கொண்டாட உள்ளனர். இந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், இந்த விடுமுறை குறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கனிமொழி எம்.பி.யிடம் சாமிதோப்பு பாலஜனாதிபதி மனு அளித்தார்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!