தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முக்கிய கோரிக்கை!
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பலர் பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள நிலையில் அது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறை கோரிக்கைகள்:
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள மொத்தம் 19,290 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பல சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என வேலை நிறுத்த போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும் பழைய ஓய்வூதியத்திட்டதை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். போக்குவரத்து கழக கோரிக்கை நிறைவேற்றப்படும் என திமுக அரசு வாக்குறுதி அளித்து இருக்கிறது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – தனியார் கல்வி நிறுவனங்கள் முக்கிய கோரிக்கை!
அது குறித்து அதிமுக அமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் கூறுகையில், திமுக வாக்குறுதி அளித்தது போல போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படவில்லை. அது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் 31-05-2022 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு எந்தவித ஓய்வூதிய பயன்களும் அளிக்கவில்லை. மேலும் கும்பகோணம் பணிமனையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய ரமேஷ் என்பவருக்கு ஓய்வூதிய பலன்கள் கொடுக்காமல் இருந்ததால் அவர் மன உளைச்சலால் இறந்து போனார்.
Exams Daily Mobile App Download
அதனால் ஓய்வூதியதாரர்கள் அதன் பலன்களை வைத்து தன் மகன் அல்லது மகளுக்கு திருமணத்தை நடத்தலாம் எனவும், உயர்கல்வி படிக்க வைக்கலாம் எனவும், வீடு வாங்கிய கடனை அடைக்கலாம் எனவும் ஆசையாக இருந்தவர்களுக்கு எந்த சலுகையும் வழங்காமல் இருப்பது பெரிய கஷ்டமாக இருக்கிறது. அதனால் அரசு தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்