சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிட்டோர் கவனத்திற்கு – பக்தர்கள் வருகைக்கான தடை நீக்கம்!

0
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிட்டோர் கவனத்திற்கு - பக்தர்கள் வருகைக்கான தடை நீக்கம்!
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிட்டோர் கவனத்திற்கு - பக்தர்கள் வருகைக்கான தடை நீக்கம்!
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிட்டோர் கவனத்திற்கு – பக்தர்கள் வருகைக்கான தடை நீக்கம்!

கேரள மாநிலத்தில் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று முதல் கோயிலுக்கு பக்தர்கள் வருகை தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

தடை நீக்கம்:

கேரள மாநிலத்தின் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். வருடம் முழுவதும் அதிக பக்தர்கள் வரும் போதிலும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்பனுக்கு மாலை போட்டு வழிபடுவதற்காக வரும் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும். கடந்த ஆண்டு முதல் கொரோனா தொட்டிற்று பரவல் அச்சம் காரணமாக அனைத்து வழிபாட்டு தளங்களில் பக்தர்களின் வருகை தடை செய்யப்பட்டிருந்தது. கொரோனா தொற்று அபாயம் குறைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து தான் மீண்டும் பக்தர்களின் வருகைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் பொது இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி கட்டாயம் – அரசு முக்கிய உத்தரவு!

ஆனால் கடந்த வாரம் முதல் கேரள மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளம் ஏற்பட்டு பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. பல இடங்களிலும் நிலச்சரிவு, கட்டிடங்கள் இடிந்து விழுவது போன்ற பல பதிப்புகள் ஏற்பட்டது. மேலும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பாதைகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டிருந்ததால் பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் தேவஸ்தானம் நிர்வாகம் அறிவித்திருந்தது. பின்னர், சாலைகள் சீரமைக்கப்பட்ட பின்னர் மீண்டும் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

பாரதி கண்ணம்மாவை சேர்ந்து வாழ உத்தரவிட்ட நீதிபதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

இந்நிலையில் கார்த்திகை மாத பூஜைகள் தொடங்கப்பட்ட நிலையில், பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளது. இதனால் அணைகளின் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பம்பை ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பம்பை பகுதிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் சபரிமலை கோயிலுக்கு பக்தர்களின் வருகை தடை செய்யப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதை அடுத்து பக்தர்களின் வருகை மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் பதிவு மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!