பாரதி கண்ணம்மாவை சேர்ந்து வாழ உத்தரவிட்ட நீதிபதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மா வழக்கை விசாரித்த நீதிபதி இருவரும் 6 மாதம் சேர்ந்து வாழ வேண்டும் என உத்தரவிடுகிறார். அதற்கு பாரதி மறுப்பு தெரிவிக்க, கண்ணம்மா சம்மதம் தெரிவிக்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், நீதிபதி வந்து அமர பாரதியும் கண்ணம்மாவும் வாங்க என சொல்கிறார். அப்போது நீதிபதி வழக்கின் தீர்ப்பை வழங்க இருக்கிறார். இதுவரை வந்த வழக்குகளில் இப்படி ஒரு வழக்கை பார்த்தது இல்லை என நீதிபதி சொல்கிறார். பின் திருமண வாழ்க்கையில் நம்பிக்கை தான் முக்கியம். அது உங்களிடம் நிறைய இருக்கிறது ஆனால் புரிதல் தான் இருவருக்கும் இல்லை என நீதிபதி சொல்கிறார். அதனால் இப்போது விவாகரத்து தர முடியாது என நீதிபதி சொல்ல, இருவரும் 6 மாதம் சேர்ந்து வாழ வேண்டும் என உத்தரவிடுகிறார்.
அதை கேட்டு பாரதி அதிர்ச்சி அடைய நான் விவாகரத்து கேட்டு வந்தேன் ஆனால் நீங்க சேர்ந்து வாழ சொல்றீங்க என கேட்கிறார். இது கோர்ட் விதி தான், நீங்க இருவரும் எத்தனை ஆண்டு சேர்ந்து வாழ்ந்தீங்க என கேட்க, 1 முதல் 1.5 வருடம் என பாரதி சொல்கிறார். அப்போது இவ்வளவு குறைந்த வருடம் தான் சேர்ந்து இருக்கீங்க அதனால் விவாகரத்து தர முடியாது என நீதிபதி சொல்கிறார். கண்ணம்மாவிடம் நீதிபதி உங்களுக்கு சேர்ந்து வாழ இஷ்டமா என கேட்க கண்ணம்மா இஷ்டம் என சொல்கிறார். அதை கேட்டு சௌந்தர்யா சந்தோசப்படுகிறார்.
பாரதியிடம் குடும்பநல நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்குவது இயல்பு தான் 6 மாதம் கழித்து ஒன்றாக வந்து வாழ விருப்பமில்லை என சொல்லுங்க அப்போது பார்க்கலாம் என நீதிபதி சொல்கிறார். மறுபக்கம் அஞ்சலி பிரசவ வலியால் துடிக்க ரவுடிகள் வந்து பார்த்து மாயாண்டியை அழைக்கின்றனர். ஆனால் அவர் வந்து பார்த்து செத்தால் சாகட்டும் என சொல்கிறார். பின் நீதிமன்றத்தில் சாந்தி இருக்க, இப்படி தீர்ப்பு வழங்கியதை நினைத்து வருத்தப்படுகிறார்.
அகில் எல்லா இடங்களிலும் அஞ்சலியை தேட, சௌந்தர்யா வேணு இப்போது தான் நிம்மதியாக இருப்பதாக சொல்கிறார். இப்படி ஒரு தீர்ப்பு வரும் என கனவில் கூட நினைத்தது இல்லை என சௌந்தர்யா சொல்கிறார். அப்போது அகில் போன் செய்த தீர்ப்பு பற்றி சொல்லி சந்தோசப்படுகிறார். அஞ்சலியிடம் சொல்லிவிடு என சௌந்தர்யா சொல்ல, அப்போது அகில் அஞ்சலி அங்கேயும் செல்லவில்லை என நினைக்கிறார். அஞ்சலி வலியால் துடிக்க சாந்தி போன் செய்கிறார். தீர்ப்பு பற்றி மாயாண்டியிடம் சொல்ல, அஞ்சலி கதையை முடிக்க போவதாக சொல்கிறார்.
சென்னையில் நாளை (நவ.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!
பின் சௌந்தர்யா கண்ணம்மாவிடம் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தது பெரிய விஷயம் என சொல்ல, இனிமேல் எல்லா கஷ்டமும் தீர போவதாக சௌந்தர்யா சொல்கிறார். தீர போகிறதா இனிமேல் தான் வர போகிறதா என பார்க்கலாம் என கண்ணம்மா சொல்ல, பாரதி அங்கே வருகிறார். சௌந்தர்யா பாரதி விவாகரத்து வழக்கு தொடர்ந்ததற்கு ரொம்ப நன்றி என சொல்ல, நான் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவிக்கவில்லை என பாரதி சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.