தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை – அரசுக்கு கோரிக்கை!
வங்கக்கடலில் ஏற்படுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.10,000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவாரணத்தொகை:
வங்ககடலில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த வருடங்களில் இல்லாத அளவு இந்த வருடம் அதிக கனமழை பெய்து வருகிறது. இரவு பகலாக இடைவிடாது பெய்த கனமழையால் முக்கிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. பலர் உடைமை, விளைபொருட்களை இழந்து தவித்து வருகின்றனர். தலைநகர் சென்னயில் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
அடுத்த 2 மாதங்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு ஆலோசனை!
இந்த கனமழையால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 50,000 ஹெக்டேர் நில பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதிலிருந்து மீண்டு வர முடியாத நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் 12 மாவட்டங்கள் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் வேலைகளுக்கும் செல்ல முடியாமல் மக்கள் வருமானம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று என்று தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பென்சன் வாங்குவோர்க்கு முக்கிய அறிவிப்பு – இன்னும் 1 நாள் தான் இருக்கு!
இது குறித்து தமிழ்நாடு முஸ்லீம் லீக் வெளியிட்ட அறிக்கையில் வெள்ள நிவாரணத் தொகை வழங்குவதில் அரசு கால தாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும். பொது மக்களின் மீது அக்கறை கொண்டு நிவாரண நிதி வழங்க வேண்டும். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.