குரங்கு காய்ச்சல் பரவல் பற்றிய தகவல் வெளியீடு – இதுவரை 4100 பேர் பாதிப்பு!
உலகளவில் கொரோனாவால் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், தற்போது 50 நாடுகளில் குரங்கு காய்ச்சல் நோய் மொத்தம் 4,100 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் பற்றிய புதிய தகவல்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
குரங்கு காய்ச்சல்:
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பல உலக நாடுகள் தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் கிட்டத்தட்ட 50 நாடுகளில் குரங்கு காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்த நோயால் 4,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் கொரோனா போல இதை சர்வதேச பெருந்தொற்றாக அறிவிக்க தேவையில்லை என உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நோய் பற்றி அறியப்படாத விஷயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நோய் ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தை சேர்ந்த பெரும் மரபணு வைரஸால் ஏற்படுகிறது. அந்த வைரஸ் தான் மனிதர்களுக்கு ஏற்படும் சின்னம்மை, பெரியம்மை நோய்களுக்கு காரணம். ஆனால் குரங்கு காய்ச்சல் வைரஸ் எலிகள் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் உள்ள இதர விலங்குகளில் காணப்படுகிறது. ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் ஒரு சீரான உருமாற்றம் அடையாத வைரஸ் ஆகும். ஆனால் அது உருமாற்றம் அடைந்தது தான் குரங்கு காய்ச்சல் நோய்க்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் மருந்துக்கும் GST விலக்கு? வலுக்கும் கோரிக்கை!
பொதுவாக குரங்கு காய்ச்சல் நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருக்கு அறிகுறிகள் வர 8 நாட்கள் ஆகும். நிணநீர் முடிச்சுகள் வீக்கம், காய்ச்சல், அரிப்பு போன்ற முக்கிய அறிகுறிகள் தென்படும். இந்த அறிகுறிகள் சுமார் 2 வாரங்கள் இருக்கும். இந்த நோயால் அதிகமாக குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள் அவர்கள் இறந்துவிட கூட வாய்ப்புகள் அதிகம். ஆப்ரிக்காவில் தான் இந்த நோய் தாக்கம் அதிகம் இருக்கும் நிலையில் அதில் உயிர் இழந்தவர்கள் பெரும்பாலும் குழந்தைகள் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நோய்க்கு சின்னம்மைக்கு போடும் தடுப்புகள் 85 சதவிகிதம் பலன் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சின்னம்மைக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் குரங்கு காய்ச்சலுக்கு பலன் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அளவிற்கு இந்த நோய் தாக்கம் இருக்க காரணம் அது உருமாற்றம் அடைந்தது தான். இந்த உருமாற்றங்கள் எப்படி பாதிக்கின்றன, எப்படி பரவுகின்றன என்று தெரியவில்லை. இந்த வைரஸ் சுவாசம் மூலமாக பரவும், தூசுப்படலம் மூலம் பரவ வாய்ப்புள்ளது. மேலும் விலங்குகளில் இருந்து தான் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. அது மட்டுமில்லாமல் நோய் பாதித்தவர்களிடம் நெருக்கமான தொடர்பு வைத்து இருந்தாலும் பாதிப்பு ஏற்படுகிறது. குரங்கு காய்ச்சல் பரவலாக பரவக்கூடியது கொரோனா பாதிப்பும் இந்த அபாயத்தை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.