புற்றுநோய் மருந்துக்கும் GST விலக்கு? வலுக்கும் கோரிக்கை!

0
புற்றுநோய் மருந்துக்கும் GST விலக்கு? வலுக்கும் கோரிக்கை!
புற்றுநோய் மருந்துக்கும் GST விலக்கு? வலுக்கும் கோரிக்கை!
புற்றுநோய் மருந்துக்கும் GST விலக்கு? வலுக்கும் கோரிக்கை!

வரிகள் நேர்முக வரி, மறைமுக வரி என இரு வகைப்படும். சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி. என்பது ஒரு மறைமுக வரியாகும். இந்நிலையில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி யில் இருந்து புற்றுநோய் மருந்துகளுக்கு விலக்கு அளிக்கும்படி பார்லி குழுவிடம் கோரிக்கை அளிக்கப்பட்டு உள்ளது.

GST விலக்கு:

இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை காரணமாகவும், உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச காரணங்களாலும் இந்தியாவின் பணவீக்கம் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.95% என்ற உச்சத்தை எட்டியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.

Exams Daily Mobile App Download

இத்தகைய சூழலில் ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டால் விளைவுகளை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது என பல தரப்பில் இருந்து கருத்து முன்வைக்கப்பட்டது. இப்போது 5%, 12%, 18%, 28% ஆகிய அளவுகளில் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சரக்கு மற்றும் சேவை வரியான G.S.T யில் இருந்து புற்றுநோய் மருந்துகளுக்கு விலக்கு அளிக்கும்படி பார்லி குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் தலைமையிலான அதிகாரிகள், பார்லி குழு முன் ஆஜராகி பல்வேறு யோசனைகளை தெரிவித்தனர்.

புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – இனி அஞ்சல் மூலமாக வழங்க முடிவு!

  • இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியது, புற்றுநோயை அறிவிக்கப்பட்ட நோயாக அரசாணை வெளியிட வேண்டும்
  • இதனால் புற்றுநோய் மற்றும் நோயாளிகளின் விவரங்களை அனைத்து மருத்துவமனைகளும் அரசுக்கு கட்டாயம் தெரிவிக்க நேரும்.
  • இதன் மூலம் புற்றுநோய் பாதிப்பு, நிவாரணம் உள்ளிட்ட விவரங்களை சுலபமாக அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க முடியும். புற்றுநோய் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • அத்துடன் புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை கட்டணத்தையும் அரசே நியாயமாக நிர்ணயிக்கலாம் என, யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புற்றுநோயாளிகளின் சிகிச்சை செலவு பெருமளவு குறையும்.
  • அவர்களின் யோசனைகளை பார்லி குழு ஆராய்ந்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும் என கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!