அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான நியமன வயது வரம்பில் தளர்வு – முதல்வர் அறிவிப்பு!! 

0
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான நியமன வயது வரம்பில் தளர்வு
தமிழகத்தில் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கான நேரடி நியமனத்தில் வயது உச்சவரம்பு தளர்வு வழங்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
 வயது வரம்பு தளர்வு:

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம், பதவி உயர்வு தொடர்பாக அரசு ஏகப்பட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான நேரடி நியமனத்தில் வயது உச்சவரம்பு தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, ஆசிரியர்கள் நேரடி நியமனத்தில் பொதுப்பிரிவினருக்கு 53 வயதும், இதர பிரிவினருக்கு 58 வயதும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது சிறும்பான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான நேரடி நியமனத்தில் வயது உச்சவரம்பினை விரிவுபடுத்த ஆராயப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் , பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு போராட்டம் நடத்தாமல் இனி இணையதளம் மூலமாகவே கோரிக்கை விடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென, தனி இணையதளம் உருவாக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!