கூட்டுறவுத்துறையில் பணியிடங்களுக்கு மீண்டும் நேர்காணல் – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் நடக்கு பல்வேறு விஷயங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கமளித்துள்ளார். அதில் முக்கிய தகவல்களையும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் நேர்காணல்:
தமிழகத்தில் அரசு பல்வேறு புதிய அறிவிப்புகளையும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்து உள்ளது. அவை அனைத்தும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல் செயல்பாட்டிற்கு விரைவில் வரவேண்டும் என்று முதல்வர் அறிவித்து அதற்கான பணிகளையும் விரைந்து தொடங்க அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதனால் அனைத்து துறைகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.
நாளை கோவையில் முழு ஊரடங்கு அமல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
அதில், செய்தியாளர்கள் பல கேள்விகள் கேட்டனர். அப்போது ஒருவர், கடந்த ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட நேர்காணல் குறித்து கேட்டார். அதற்கு அமைச்சர், கடந்த ஆட்சியில் கூட்டுறவுத்துறை பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட நேர்முகத்தேர்விற்கு பணி நியமனம் செய்யப்படவில்லை. இதற்கான நேர்முகத்தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என்று கூறினார். மேலும், பயிர்க்கடனில் 2,393 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகை தள்ளுபடிக்கு தகுதியான ஏழை, எளிய மக்கள் கண்டறியப்பட்டு தள்ளுபடி வழங்கப்படும். இதற்காக முதல்வர் 6,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். நகைக்கடனில் அதிக முறைகேடுகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தல் பற்றிய கேள்விக்கு திமுக எதையும் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.