நாளை கோவையில் முழு ஊரடங்கு அமல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவானது வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாநிலம் முழுவதும் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு வரும் தினசரி கொரோனா பாதிப்பின் அடிப்படையில் கோவை மாநகரத்திற்கு மட்டும் அரசு சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சென்னையிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு? – மாநகராட்சி ஆணையர் தகவல்!
முன்னதாக, உணவகங்கள், அடுமனைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்காக மட்டுமே திறந்திருக்க வேண்டும். மால்கள், திரையரங்குகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் இயங்க தடை போன்ற கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இதனால் ஞாயிறு கிழமையான நாளை காய்கறி, பால், மளிகை கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர ற்ற கடைகள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வார சந்தைகளுக்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் மொத்த விற்பனை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நோய் தொற்றை தடுப்பதற்காக அரசு தரப்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.