தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பொருட்கள் பதிவு செய்யும் முறையில் மாற்றம்!
தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடை:
தமிழகத்தில் மாநில அரசால் வழங்கப்படும் ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு அவர்களும் பயன்பெறும் வகையில் இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வசிக்கும் மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொருட்களை பெற்று வருகின்றனர்.
LPG கேஸ் சிலிண்டர் விலை முதல் தங்க நகை ஹால்மார்க் வரை – ஜூன் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!
இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் பெற ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மேலும் பொருட்கள் பயோமெட்ரிக் இயந்திரம் மூலம் பதிவு செய்யப்பட்டு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் மக்கள் பொருட்கள் பெறுவதில் சிக்கல் எழுந்தது. சில நேரம் கைரேகை பதிவாவதில்லை என்று புகார்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக வயதானவர்களுக்கு தோல் சுருக்கம் காரணமாக கைரேகை பதிவாகுவதில்லை. மேலும், இதில் சில குளறுபடிகள் நடப்பதாக கூறப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக இத்திட்டம் நகரப் பகுதிகளில், ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் என்றும் பதிவின் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். தற்போது கண் கருவிழி பதிவு முறை சோதனையில் உள்ளது, இதன் மூலம் பயோ மெட்ரிக் முறைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.