ஆசிரியர் பணி வழங்க மறுப்பு – தேர்வர் மனு தாக்கல் – மதுரை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

0
ஆசிரியர் பணி வழங்க மறுப்பு - தேர்வர் மனு தாக்கல் - மதுரை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
ஆசிரியர் பணி வழங்க மறுப்பு - தேர்வர் மனு தாக்கல் - மதுரை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
ஆசிரியர் பணி வழங்க மறுப்பு – தேர்வர் மனு தாக்கல் – மதுரை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் ஒரே கல்வி ஆண்டில் பி.எட், எம்.எஸ்.சி என்ற இரு படிப்புகளையும் முடித்துள்ளதாக செண்பகம் என்பவருக்கு பணி வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்துள்ளது. இதனை எதிர்த்து அந்த நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

பணி மறுப்பு:

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2000-க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு 2022 பிப்ரவரி மாதம் நடைபெற்றது. முதன் முறையாக உடற்கல்வி இயக்குனர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை – 1 பதவிகளுக்கான தேர்வு கணினி வழியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சுமார் 190 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட இந்த தகுதித்தேர்வில் 2.30 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி வெளியிடப்பட்டு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தொடங்கப்பட்டது.

அதை தொடர்ந்து பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரே ஆண்டில் பி.எட் படிப்பையும் எம்.எஸ்.சி படிப்பையும் படித்துள்ளதாக கூறி ஆசிரியர் தேர்வு வாரியம் பணி வழங்கவில்லை என செண்பகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஒரே கல்வியாண்டில் ஒரு பட்டத்தை நேரடியாகவும், மற்றொரு பட்டத்தை தொலைதூரக் கல்வி மூலமாகவும் பெறுவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அரசு பணி நியமனங்களில் சிக்கல் எழுந்து வருகிறது. இந்த நிலையில் செண்பகம் என்பவர் அளித்த மனுவை விசாரித்த நீதிபதி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஷாக் அடிக்கும் மின் கட்டண உயர்வு – இனி மின் சிக்கனம் அவசியம்.. சுதாரித்து கொள்ளுங்க மக்களே!

Exams Daily Mobile App Download

ஆண்டுதோறும் பல்கலைக்கழகங்களில் காலாண்டர் ஆண்டு மற்றும் கல்வி ஆண்டு என்று இரு முறைகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதனால் குழப்பம் நிலவுகிறது என்று கூறியுள்ளார். மேலும் வழக்கு தொடர்ந்த மனுதாரர் வெவ்வேறு ஆண்டுகளில் பட்டபடிப்பை படித்துள்ளார். அதனால் அவருக்கு அடுத்த இரண்டு வாரத்திற்குள் பணி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். அத்துடன் மாணவர்கள் ஒரு கல்வியாண்டில் 10 மாதங்கள் படித்து முடித்த பிறகே பல்கலைக்கழகங்கள் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!