ஷாக் அடிக்கும் மின் கட்டண உயர்வு – இனி மின் சிக்கனம் அவசியம்.. சுதாரித்து கொள்ளுங்க மக்களே!
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கட்டாயம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
மின்கட்டணம்:
தமிழகத்தில் மத்திய அரசின் வலியுறுத்தலின் படி கடந்த மாதம் அதாவது செப்டம்பர் 9ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் தமிழக அரசு வேறு சில திட்டங்களையும் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது முதல் 100 யூனிட் இலவச மின்சாரத்தை அரசிடம் வேண்டாம் என்று தானாக முன்வந்து வழங்கும் நபர்களுக்கு 2 வது 100 யூனிட் மின்சாரத்தில் 50% மானியம் அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு என்னதான் புதிய திட்டங்களை கொண்டு வந்தாலும், மக்களும் இந்த நேரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். மின்வாரிய ஊழியர்கள், இதனால் மக்களை மின்பயன்பாட்டை குறைந்த அளவில் பயன்படுத்தும் வகையிலான அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட மின்சாதனங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்துகின்றனர். இதேபோல், ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆலைகள் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் மின் சாதன பயன்பாடும், அதனால் மின் செலவுகளும் அதிகம் ஏற்படும்.
Exams Daily Mobile App Download
மேலும், விவசாயத்திற்காக பயன்படுத்தும் மின் மோட்டார் மற்றும் மற்ற சாதனங்களும் அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட பொருட்களாக இருந்தால் தான் மானியம் வழங்கப்படும் என்றும் வலியுறுத்தப்பட உள்ளது. மேலும், வீடுகளிலும் டிவி, ஏசி போன்ற பொருட்களை பயன்படுத்தி விட்டு வெறும் ரிமோட்டில் மட்டும் அணைக்காமல், நேரடியாக ஸ்விட்ச்களை பயன்படுத்தியும் அணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்