ஆசிரியர் தகுதித் தேர்வு பாடங்களில் கட் ஆப் மதிப்பெண்கள் குறைப்பு – மாநில அரசு முடிவு!
ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) எழுத இருக்கும் தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கர்நாடக மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி பள்ளி ஆசிரியர் தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை கர்நாடக அரசு குறைத்து இருப்பதாக அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி)
கர்நாடகா மாநில அரசின் கீழ் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்விற்கான கட்ஆப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டிருப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்து முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளி ஆசிரியர் பணிக்கான தேர்வில் முக்கிய பாடங்கள் மற்றும் மொழிகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களை குறைக்க கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இது குறித்து சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முக்கிய பாடங்களுக்கு கட்-ஆஃப் மதிப்பெண்கள் 50லிருந்து 45 ஆகவும், மொழிகளுக்கு 60லிருந்து 50 ஆகவும் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக 2000 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
ரேஷன் பொருட்கள் பெறும் விதிகள் மாற்றம் – இனி இதை கட்டாயம் செய்ய வேண்டும்.. மாநில அரசு உத்தரவு!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து இந்த கட் ஆப் மதிப்பெண் குறைக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பள்ளிகளில் பல்கலைக்கு முந்தைய படிப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 10 சதவிகிதமும், பட்டப்படிப்பு மதிப்பெண்களில் 20 சதவிகிதம் அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பி எட் மதிப்பெண்களில் 20 சதவீதம் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.