ரேஷன் பொருட்கள் பெறும் விதிகள் மாற்றம் – இனி இதை கட்டாயம் செய்ய வேண்டும்.. மாநில அரசு உத்தரவு!
இந்தியாவில் ரேஷன் அட்டைதாரர்கள் பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்து மாதந்தோறும் ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில அரசு கைரேகை பதிவு செய்வதில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
கைரேகை பதிவு :
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் ரேஷன் அட்டைதாரர்கள் மாதந்தோறும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை பெற்று வருகின்றனர். அதுமட்டுமல்ல, அரசின் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் வாயிலாகவே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்வதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
வழக்கமாக ரேஷன் அட்டைதாரர்கள் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஒரு முறை கட்டை விரலை பதிவு செய்து பொருட்களை வாங்குகின்றனர். இந்த நிலையில் மத்திய பிரதேச அரசு பயோ மெட்ரிக் இயந்திரத்தில் இரண்டு முறை கட்டை விரலை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் மத்திய அரசால் பயனாளிகளுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் மற்றும் மாநில அரசின் 5 கிலோ தானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவை தாக்கும் அமெரிக்க டாலர் மதிப்பு? தீபாவளிக்கு பிறகு உயரவுள்ள மொபைல் போன்களின் விலை!
Exams Daily Mobile App Download
அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கென தனித்தனியாக இரண்டு முறை கட்டை விரலை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை கட்டை விரலை ஸ்கேன் செய்தால் மட்டுமே உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்களை பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த புதிய விதி குறித்து பயனாளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.