கேரளாவில் இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
கேரளாவில் இடுக்கி, திருச்சூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்க்கு அதி தீவிர கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்:
தென்மேற்கு பருவமழைக் காலம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்ப்பிடிப்பு அணைப்பகுதிகளில் நீரின் அளவு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலமான தற்போது கேரளா மாநிலத்திற்கு புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
IPL 2021: SRH vs RR: 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியை பெற்ற ஐதராபாத்!
அதன்படி, கேரளா மாநிலத்தின் இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டத்தில் அதி தீவிர கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், எர்ணாகுளம் மாவட்டத்திற்கு அதி கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர மற்ற மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளா மாநிலம் முழுவதுக்குமான எச்சரிக்கையை தொடர்ந்து அரசு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5ன் தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் – யார் யாருனு பாருங்க!
மேலும், அக்டோபர் மாதம் 1ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் முன்னறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளா மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்த நிலையில் உள்ளதால் மழைக்காலத்தில் மேலும் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை தொடர்ந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.