பிக்பாஸ் சீசன் 5ன் தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் – யார் யாருனு பாருங்க!
வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியினை பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், போட்டியாளர்கள் தொடர்பான புதிய செய்தி கிடைத்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 5:
ஒரு வீட்டில் முன்பின் அறிமுகம் இல்லாத 17 பேர் வெளி உலக தொடர்பு முற்றிலும் இல்லாமல் 100 நாட்கள் பல்வேறு டாஸ்க்குகளையும் செய்து வெற்றி பெரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் இதுவரை முடிந்துள்ளது. இந்த வருடத்திற்கான நிகழ்ச்சியின் அறிவிப்பு எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர். அதேபோல், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் அரசியலில் குதித்திருப்பதால், இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை வேறு நடிகர் தான் தொகுத்து வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் அறிமுகம் செய்த டிஜிட்டல் ஹெல்த் ஐடி – முழு விவரம்!
ஆனால் சீசன் 5ன் ஆரம்ப டீசர் முதல் அடுத்தடுத்து வெளியான ப்ரோமோ வரை அனைத்திலும் வழக்கத்தை விட அதிக குஷியாக கமல் உள்ளது போல் வெளியாகியுள்ளது. இதனால் உலக நாயகனின் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே பங்கேற்க உள்ள பிரபலங்கள் பற்றி பல தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த முறை வழக்கம் போல் பல்வேறு துறைகளிலும் பிரபலமாக உள்ளவர்கள் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும், பல விதமான சர்ச்சைகளில் சிக்கி உள்ள பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தது. இந்நிலையில், வரும் ஞாயிற்று கிழமையான அக்டோபர் 3ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்பட்ட பிரபலங்களான மிலா, ஷாலு ஷம்மு, கண்மணி போன்றவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனால் இவர்கள் அனைவரும் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.