தமிழ்நாட்டில் “அக்னிபாத்” திட்டத்தில் ஆட்சேர்ப்பு முகாம் – மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசு 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய ராணுவத்தில் மூன்று வருட ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அக்னிபாத் திட்டம்
இந்திய ராணுவத்தில் மூன்று வருட ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இந்திய ராணுவத்தின் கடற்படை, விமானப்படை மற்றும் காலாட் படையில் 3 ஆண்டுகள் தற்காலிக பணிகள் வழங்கப்படுகின்றன. இதுவரை இந்த திட்டத்தில் பல லட்சம் இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்கள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கல்லூரி மாணவிகளுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு – கேரளா அரசின் அதிரடி அறிவிப்பு!
அதன் படி 16 தென் மாவட்டங்களில் இந்த திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது எனவும், இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் மார்ச் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி முதலில் உடற்தகுதி தேர்வும் அதன் பின் எழுத்து தேர்வும் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Exams Daily Mobile App Download