கல்லூரி மாணவிகளுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு – கேரளா அரசின் அதிரடி அறிவிப்பு!
கேரளாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவிகளுக்கு 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஆறு மாத மகப்பேறு விடுப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மகப்பேறு விடுப்பு
கேரளா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்து வரும் திருமணம் முடிந்த மாணவிகளுக்கு ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு விட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாதவிடாய் விடுப்பு மற்றும் மகப்பேறு விடுப்பு வழங்குவதை நோக்கமாக வைத்து செமஸ்டர் தேர்வுகளில் குறைந்தபட்ச வருகையை 73 சதவீதமாக குறைக்க சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் பின் இது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மாணவிகள் ஆறு மாத விடுப்பிற்கு பின் மறு சேர்க்கை எடுக்கலாம் தங்களது கல்லூரிகளில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
PG TRB Exams 2023 படித்து கொண்டிருப்பவர்களா? சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு! Join Now!
மேலும் மாணவிகள் கல்லூரிகளில் சேரும் போது கல்லூரி முதல்வரால் சரிபார்க்கப்பட்ட மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடவடிக்கை பெண்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மகப்பேறு மற்றும் மாதவிடாய் விடுப்பு வழங்கும் முதல் மாநிலமாக கேரளா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.