ஆதார் கார்டுடன், பான் எண்ணை இணைக்க முடியவில்லையா? முக்கிய காரணங்கள் இதோ!
இந்தியாவில் தனிநபரின் அடையாள ஆவணங்களில் ஒன்று ஆதார் கார்டு ஆகும். இந்த ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதில் இன்னும் சிக்கல் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஆதார் கார்டு
ஆதார் கார்டு இந்தியாவில் இந்திய குடிமகனின் அடையாள ஆவணங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இந்த ஆதார் கார்டுடன் பான் அட்டையை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாததாக மாறிவிடும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதனை தொடர்ந்து வருமானவரிச் சட்டம் 1961-இல் 234 ஹெச் என்ற புதிய விதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்லூரிகளுக்கு பிப்ரவரி 15 வரை விடுமுறை நீட்டிப்பு – ஹிஜாப் விவகாரம்! அரசு அதிரடி உத்தரவு!
இந்த புதிய விதியானது மத்திய அரசு அறிவித்த குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்கவில்லையெனில் 10000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்க இந்த விதி கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் வருகிற மார்ச் 31ம் தேதிக்குள் பான் ஆதார் இணைப்பு மேற்கொள்ள வேண்டும். இதனை இணைப்பதற்கு வருமான வரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் சென்று இணைக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு – அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
இதில் தெரிவித்தாவது, நாட்டில் இதுவரை 43,34,75,209 பான் கார்டுகள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். தற்போதும் பான், ஆதார் இணைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் பான் மற்றும் ஆதார் ஆவணத்தில் இருக்கும் விவரங்களின் வித்தியாசம் தான் என்று கூறப்படுகிறது. அதாவது பெயர், பிறந்த தேதி, பிறந்த ஆண்டு, மொபைல் எண், இணைப்புக்கான ஓடிபி உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் வித்தியாசம் இருந்தால் பான் ஆதார் இணைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள இது தொடர்பான அதிகாரிகளை அணுகி தீர்வுகள் பெற்று கொள்ளலாம்.