தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு – அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
தமிழகத்தில், அஞ்சல் துறையில் 17 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 10 ஆகும். இந்த பணிக்கு கூடுதல் விவரம் அறிய அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், ஒத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு மற்றும் அரசுசாரா வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. மேலும் வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து இந்திய அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் DA முதல் HRA வரை உயர்வு? முழு விவரம் இதோ!
அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஸ்டாஃப் கார் டிரைவர் (17 பணியிடங்கள்) பணிக்கு 56 வயது நிறைவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்படுபவர் களுக்கு ஊதிய அளவு நிலை-2 ஆகும். மேலும் ஸ்டாஃப் கார் டிரைவர் பணிக்கு,கோயம்புத்தூர் மாவட்டத்தில் 11 பணியிடங்கள், ஈரோடு பிரிவு 2 பணியிடங்கள், நீலகிரி பிரிவு 1பணியிடம் ,சேலம் மேற்கு பிரிவு 2 பணியிடங்கள், திருப்பூர் பிரிவு 1 பணியிடம் ஆகும். இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் மூன்று வருட அனுபவத்துடன் இலகு ரக மற்றும் கனரக மோட்டார் வாகனத்திற்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனுபவம் மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
பிப்ரவரி 20 வரை இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இந்த பதவிகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழியில் ஏற்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது, சாதி, தகுதி, அனுபவம், ஓட்டுநர் உரிமம் போன்ற சான்றுகளின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன், மேலாளர் அஞ்சல் மோட்டார் சேவை குட்ஸ் ஷெட் சாலைகள் கோயம்புத்தூர்- 641001 என்ற முகவரிக்கு நிரப்பபட்ட விண்ணப்பங்களை அஞ்சல் வாயிலாக அனுப்பலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 10, 2022 ஆகும்.