கருக்கலைப்பு செய்து கொண்ட சமந்தா? விவகாரத்திற்கு இதுதான் காரணமா? அவரே அளித்த பதில்!
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா அவர்களின் விவாகரத்திற்கு பல்வேறு காரணங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தற்போது இதற்கு சமந்தா சமூக வலைதளம் வாயிலாக பதிலளித்துள்ளார்.
சமந்தா விவாகரத்து:
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகி நடித்து வரும் சமந்தாவும் தெலுங்கில் டாப் ஹீரோக்களில் ஒருவராக உள்ள நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமண வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்தும் வந்தனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தனர். அவ்வப்போது தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றனர்.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் சன் டிவி “ரோஜா” சீரியல் வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!!
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் குறித்த தகவல் தொடர்ந்து வெளியாகி வந்தாலும் இருவருமே அமைதி காத்து வந்தனர். தற்போது இவர்களின் 4ம் திருமண நாள் வரவிருக்கும் நிலையில் இருவரும் திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்தனர். இது அவர்களின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் நண்பர்களாக பயணிக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் விவாகரத்துக்கு ரூ.5 கோடி கொடுக்கும் பாரதி – கண்ணம்மா எடுக்கும் முடிவு?
அதனை தொடர்ந்து இவர்களின் பிரிவு குறித்து பல்வேறு வதந்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு சந்தர்ப்பவாதி, வேறொருவருடன் தொடர்பு, குழந்தை பெற்று கொள்ள மறுத்தேன், இப்பொது நான் கருக்கலைப்பு செய்ததாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு பதிலளித்த சமந்தா விவகாரத்தே மிகவும் வலி மிகுந்த விஷயம், இதில் இருந்து என்னை மீள விடுங்கள். இது போன்ற செய்திகளால் என்னை தொடர்ந்து தாக்கி கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் இது எதுவும் என்னை பாதிக்காது பதிலளித்துள்ளார். மேலும் விவாகரத்திற்கு பின் என்னை பற்றி பரவிய தவறான வதந்திகளின் போது எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.