‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் விவாகரத்துக்கு ரூ.5 கோடி கொடுக்கும் பாரதி – கண்ணம்மா எடுக்கும் முடிவு?
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவை விவாகரத்து செய்வதற்கு ரூ.5 கோடி தருவதாக கூறி அவரின் சித்தியிடம் பாரதி பேரம் பேசும் காட்சிகள் வெளியானதும், இதன் போக்கு என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்துள்ளார்.
பாரதி கண்ணம்மா
பல்வேறு புதிய திருப்பங்களுடன் பயணித்து வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது தலையாய பிரச்சனையாக காட்டப்படுவது விவாகரத்து காட்சிகள் தான். அந்த வகையில் இந்த வாரம் முழுவதும் வெளியான எபிசோடுகளில் கண்ணம்மாவை பாரதியிடம் இருந்து நிரந்தரமாக பிரிக்க நினைக்கும் வெண்பா, குழந்தை தன்னிடம் தான் இருப்பதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி ஒருவழியாக கண்ணம்மாவை சம்மதிக்க வைத்து விட்டார். மறு பக்கத்தில் வெண்பாவுக்கே தெரியாமல், கண்ணம்மாவை விவாகரத்து செய்ய பாரதி முயற்சித்து வருகிறது.
பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே தள்ளும் கோபி, பணத்தை மீட்டு வரும் எழில் – வெளியான ப்ரோமோ!
இப்படி பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம் என்னவாக இருக்கும் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் ஹேமா தான் கண்ணம்மாவின் 2வது குழந்தை என்ற உண்மையை சௌந்தர்யா கூறியதும் வெண்பாவின் விவாகரத்து பிளான் வழக்கம் போல சொதப்பிவிட போகிறது. என்றாலும், கண்ணம்மாவிடம் விவாகரத்து பெற்றுக்கொள்ள பாரதி ஒரு புதிய முயற்சியை கையாண்டுள்ளார்.
வெண்பாவுடன் மீண்டும் இணைந்த பாரதி, சீரியலில் புதிய ட்விஸ்ட் – ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள் ஷாக்!
அதாவது கண்ணம்மாவின் சித்தியை வைத்து மெதுவாக காய் நகர்த்துகிறார் பாரதி. அதுவும் விவாகரத்து செய்தால் கண்ணம்மாவுக்கு ரூ. 5 கோடி தருவதாகவும், சித்திக்கு 1 கோடி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறுகிறார். இதனை ஏற்றுக்கொண்ட கண்ணம்மாவின் சித்தி மகாலக்ஷ்மி, கண்ணம்மாவிடம் பேசுவதாக கூறுகிறார். இப்போது தான் வெண்பா உருவாக்கிய விவாகரத்து சிக்கல் முடிவுக்கு வர உள்ள சூழலில், பாரதி எடுக்கப்போகும் புதிய முயற்சினால் இன்னும் என்னென்ன சம்பவிக்க போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.