ரோஜா சீரியலில் இருந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வெங்கட் விலகல் – அதிர்ச்சி காரணம்! தயாரிப்பாளர்கள் விளக்கம்!
சன் டிவி “ரோஜா” சீரியலில் அஸ்வின் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் வெங்கட் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணமாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது குறித்து ரோஜா சீரியல் சீரியலின் தயாரிப்பாளர்களான சரிகம விளக்கம் அளித்துள்ளனர்.
ரோஜா சீரியல்:
தமிழ் சின்னத்திரையில் தொடர்ந்து டாப் சீரியலாக இருக்கும் ரோஜா சீரியலில் அஸ்வின் கதாபாத்திரத்தில் நடித்தவர் வெங்கட் ரங்கநாதன். அவர் விஜய் டிவி ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் திடீரென ரோஜா சீரியலில் இருந்து விலக இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு வெளியிட்டார். இது குறித்து அவரிடம் பேட்டி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டது. அதில் அவர் சீரியல் குழு மீது பல குற்றசாட்டுகளை தெரிவித்தார்.
ரோஜா சீரியலில் தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை, புரொமோவில் தன் முகத்தைக் காட்டுவதில்லை, ரோஜா சீரியல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா கேரக்டரைச் சொல்லி ஆடியன்ஸ் கூச்சலிட, அதனால் சிலர் கடுப்பானார்கள் என அவர் சொன்ன குற்றச்சாட்டுகள் சின்னத்திரை வட்டாரத்தில் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அந்த சீரியலில் தயாரிப்பாளர்களான சரிகம தரப்பில் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதில், ரோஜா சீரியலில் அஸ்வின் கதாபாத்திரத்தில் அவர் தொடக்கத்தில் இருந்தே நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரம் இல்லை. இதை முதலில் சொல்லி தான் இவரிடம் கேட்டோம், அவரும் ஒப்புக் கொண்டு தான் நடிக்க தொடங்கினார். இதுவரை அவருக்கும் புரொடக்ஷன் ஹவுஸுக்கும் எந்த பிரச்னையும் வந்ததுமில்லை. ரொம்பவே நல்லபடியா ஒத்துழைப்பு தந்துதான் நடிச்சுட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்னாடி கொரோனா வந்து பாதிக்கப்பட்ட பிறகு அந்தப் பாதிப்பின் தாக்கம் தொடர்ந்து இருக்கறதாகவும் அதனால் சில மாதம் ஓய்வு வேண்டும் என தெரிவித்தார்.
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” போட்டியாளர்கள் 16 பேரின் உறுதியான பட்டியல் – ரசிகர்கள் கொண்டாட்டம்!
அப்போ கூட அவர் கதாபாத்திரத்தை நாங்க சீரியலில் இருந்து முடிக்க விருப்பவில்லை. மேலும் 1 வருடத்திற்கு முன்பு இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக அவர் சொன்னார். ஆனால் அவரை அனுப்ப மனமில்லாமல் யோசிச்சு முடிவு செய்யுங்க என சொல்லி தொடர்ந்து சீரியலில் நடிக்க சொன்னோம். அதன் பின், சீரியல்ல ஹீரோவா பண்ண விரும்பறேன். தம்பி கேரக்டர்ல நடிச்சிட்டிருந்தா, தொடர்ந்து அந்த மாதிரி கேரக்டர்களாகவே வருது என அவர் சொன்னார். உடனே அவருடைய விருப்பம் என விட்டுவிட்டோம். மேலும் ரோஜா சீரியலில் அவருடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல முக்கியத்துவம் கொடுத்திருக்கோம் என விளக்கம் அளித்துள்ளனர்.