‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் விஜே சித்ரா குறித்து ஸ்டாலின் வெளியிட்ட பதிவு – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!
விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தற்போது 3 ஆண்டுகளை கடந்திருக்கும் நிலையில் அதற்கு நன்றி கூறும் விதமாக நடிகர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் மற்றுமொரு பதிவை வெளியிட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் கிட்டத்தட்ட 700 எபிசோடுகளாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடருக்கு மக்கள் இன்றளவும் தங்களது ஆதரவுகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் தனித்தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. குறிப்பாக கதிர் – முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த குமரன் – சித்ரா ஜோடிக்கு பெருமளவு ரசிகர்கள் இருந்தனர்.
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” போட்டியாளர்கள் 16 பேரின் உறுதியான பட்டியல் – ரசிகர்கள் கொண்டாட்டம்!
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கதிர் – முல்லை ஜோடிக்காகவே பலரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை கண்டு வந்தனர். இந்நிலையில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் தனிப்பட்ட காரியங்கள் நிமித்தமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த பேரிழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் சித்ராவை மிஸ் செய்தது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் பிரபலங்கள் மட்டுமல்ல ரசிகர்களும் தான்.
அதிலும் சித்ராவின் இறப்புக்கு பின்னர் பலரும் அந்த சீரியலை பார்ப்பதையே விட்டு விட்டனர். தற்போது மக்கள் விரும்பும் வகையில் புதிய கதைப் பின்னணியுடன் வெளியாகி இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் தற்போது 3 ஆண்டுகளை கடந்திருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர், நடிகைகள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த தகவலை நடிகர் ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, அதைக் கண்ட நடிகை சித்ராவின் ரசிகர்கள் அவரை மறந்துவிட்டதாக கூறி விமர்சனங்களை எழுப்பி இருந்தனர்.
நீண்ட நாட்களுக்கு பின் சேர்ந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன், ஐஸு – வெளியான வீடியோ!
இந்நிலையில் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக மீண்டுமாக ஒரு பதிவை வெளியிட்ட நடிகர் ஸ்டாலின், சித்ரா, நெல்லை சிவா ஆகியோரின் புகைப்படத்தை பதிவிட்டு, ‘உங்களை எங்களுக்கு யாரும் நினைவூட்ட வேண்டியதில்லை. ஏனென்றால், நீங்கள் என்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள். என்றும் உங்களின் நினைவுகளோடு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்று பதிவிட்டுள்ளார். இப்பதிவு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்களை தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.