தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – “ரீடிங் மாரத்தான்” என்கிற புதிய திட்டம் துவக்கம்!

0
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - “ரீடிங் மாரத்தான்” என்கிற புதிய திட்டம் துவக்கம்!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - “ரீடிங் மாரத்தான்” என்கிற புதிய திட்டம் துவக்கம்!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – “ரீடிங் மாரத்தான்” என்கிற புதிய திட்டம் துவக்கம்!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கூகுல் நிறுவனத்தின் வழியே “ரீடிங் மாரத்தான்” என்கிற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடக்கி வைத்துள்ளார். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக படிக்க வேண்டும் என்பதற்காக கூகுள் வாசிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.

ரீடிங் மாரத்தான்:

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த வருடங்களில் ஊரடங்கு காலத்தில் அரசு பள்ளி மாணவர்களும் வீட்டில் இருந்து கல்வி பெறும் நோக்கில் கல்வி தொலைக்காட்சி கொண்டு வரப்பட்டு அதன் மூலம் வகுப்பு வாரியாக கால அட்டவணையின் படி தினசரி அணைத்து வகுப்புகளுக்கும் அனைத்து பாடங்களும் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் வீடியோக்கள் யூடிப்பிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஏழை எளிய மாணவர்களும் கல்வி பயின்று வந்தனர்.

ஜூன் 8ம் தேதி பொது விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அதனை தொடர்ந்து தற்போது அரசு பள்ளி மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் “ரீடிங் மாரத்தான்” என்கிற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக கூகுள் நிறுவனத்துடன் ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய திட்டத்தை இன்று ஜூன் 01 முதல் 12-ம் தேதி வரை நடத்த திட்டமிடபட்டுள்ளது. இத்திட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள் தங்கள் கைப்பேசியில் “கூகுல் ரீடிங் அலாங்” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து மாணவர்களை உற்சாகப்படுத்தி வாசிப்பு திறனை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இத்திட்டத்தை இன்று திருச்சி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். குழந்தைகளுக்கு வாசிக்கின்ற திறனை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி இத்திட்டம் கொண்டு வரப்பட்டதுள்ளது என்று தெரிவித்தார். குழந்தைகள் படிக்கும் போது நூறு வார்த்தைகள் கொண்ட சிறிய கதை முதல் 400 வார்த்தைகள் கொண்ட பெரிய கதை வரை இந்த ரீடிங் மாரத்தான் திட்டம் மூலம் படிக்கச் செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!