விஜய் டிவியின் புதிய சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவியின் புதிய சீரியல்களை பற்றிய தகவல்கள் முன்னதாகவே இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி விடுகிறது. அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி ஒரு புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.
புதிய ப்ரோமோ:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே எப்போதும் தன் தரப்பு ரசிகர்களை திருப்தி செய்து வருகின்றது. அந்த வகையில் சீரியல்களின் கதைகள் அமைக்கப்படுகின்றது. அறிமுகம் ஆன ஒரே சீரியல் மூலமாக தமிழக மக்களின் மனங்களை கவர்ந்த நடிகை ரோஷினி. இவர் பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்து வந்தார். முன்னதாக வங்கி துறையில் பணியாற்றியவர், அந்த வேலை திருப்தி அற்றதாக இருப்பதால் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி அதில் பணியாற்றி வந்தார்.
கோலாகலமாக நடந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லையின் வளைகாப்பு வைபோகம் – ப்ரோமோ ரிலீஸ்!
இவரின் மாடலிங் புகைப்படங்களை பார்த்து தான் கண்ணம்மா கதாபாத்திரம் ரோஷினிக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை மிகவும் திறமையாக பயன்படுத்தி தன்னை மக்கள் கண்ணம்மாவாக மட்டுமே பார்க்கும் படியான நடிப்பை வெளிப்படுத்தினார். பின்னர், எதிர்பாராத காரணங்களால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி விலகுவதாக அறிவித்தார். இதனால் இவரது ரசிகர்கள் அதிகம் வருத்தமடைந்தனர். ஆனால் தான் மீண்டும் நடிக்க வருவேன் என்று ரோஷினி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் ஜெனிக்கு விரைவில் திருமணம் – அவரே சொன்ன விளக்கம்!
இந்நிலையில், தற்போது விஜய் டிவியில் ‘நம்ம வீட்டு மாப்பிளை’ என்ற புதிய தொடரில் ரோஷினி நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ராஜா ராணி 2 சித்து நடிக்கிறார். இதனால் இந்த சீரியல் மீதான ஆர்வம் அதிக அளவில் உள்ளது. மேலும், கதையும் மிகவும் சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டிருப்பது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பல மாதங்கள் களைத்து ரோஷினி மீண்டும் நடிக்க இருப்பதாய் அறிந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.