விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் ரீஎன்ட்ரி கொடுக்கும் நாடியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது ஏழு வாரங்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக வெளியேற்றப்பட்ட நாதியா சங் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
பிக்பாஸ் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வித்தியாசமான ஒன்றாக இருக்கிறது. இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 தொடங்கப்பட்டது. அதில் 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். நாதியா சங், மதுமிதா, பிரியங்கா, இமான், சுருதி, பாவ்னி, இசைவாணி, ராஜு, சின்னப்பொண்ணு, சிபி, அபிஷேக், அபிநய், தாமரை, ஐக்கி, அக்ஷரா, வருண், நிரூப், இமான், நமீதா மாரிமுத்து ஆகியோர் முதல் வாரத்தில் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.
‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து மீண்டும் அபிஷேக் ராஜாவை எலிமினேட் பண்ணுங்க – நெட்டிசன்கள் குமுறல்!
அவர்களில் முதல் வாரத்தில் நமிதா மாரிமுத்து வீட்டை விட்டு வெளியேறினார். இரண்டாவது வாரத்தில் முதலாவதாக மக்களின் குறைவான வாக்குகளுடன் நாதியா சங் வெளியேறி இருக்கிறார். இந்நிலையில் இந்த வாரம் அபிஷேக் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வீட்டிற்குள் வர இருக்கிறார் என நேற்றைய எபிசோடில் பார்த்தோம். கடந்த சீசன்களில் புதிதாக போட்டியாளர்கள் தான் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள். ஆனால் இந்த சீசனில் அப்படி இல்லை.
பிரசவ வலியால் உயிருக்கு போராடும் அஞ்சலி – விறுவிறுப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ அடுத்தகட்ட கதைக்களம்!
அபிஷேக்கை தொடர்ந்து முதல் போட்டியாளராக வெளியேறிய நாதியா சங் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர இருப்பதாக அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு மூலம் தெளிவாகி உள்ளது. அதாவது அவர் கமல் முன்னாள் நிற்கவே பாக்கியம் வேண்டும். அது கிடைத்ததற்கு நன்றி, மது சுருதியை சந்திக்க இருக்கிறேன் என அவர் பதிவிட்டுள்ளார். அதன் மூலம் அவர் இரண்டாவது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வர இருக்கிறாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.