இந்தியாவில் உள்ள வங்கிகளில் பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான புதிய விதிகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர இருப்பதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.
புதிய விதிகள்
ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள வங்கிகள் அல்லது என்பிஎப்சியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் அபராதம் விதிப்பது தொடர்பான புதிய விதிகள் இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர இருப்பதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) திருத்தப்பட்ட நியாயமான கடன் வழங்கும் அமைப்பு, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) வருவாய் வளர்ச்சிக்காக கடன் செலுத்தத் தவறியதற்கு தண்டனைக் கட்டணங்களைச் சுமத்துவதைத் தடுக்கிறது.
மேலும், இந்த புதிய விதி ஏப்ரல் முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது. வங்கிகளும் வங்கி சாரா நிதி நிறுவனங்களும் வருவாயை அதிகரிப்பதற்காக கடன் செலுத்துவதில் தவறினால் அபராதக் கட்டணங்களை விதித்து வருகிறது. அதனை தடுக்க ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி விதிமுறைகளை திருத்தியது குறிப்பிடத்தக்கது.