தமிழகத்தில் தற்போது மழையின் அளவு குறைந்ததையடுத்து அதிக பனிமூட்டம் நிலவி வருகிறது அடுத்த ஒரு வாரத்திற்கு பனிமூட்டம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பருவ மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து பெய்த மழை மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, திருநெல்வேலி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளானது. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது. இந்த நிலையில் ஜனவரி மாதம் தொடங்கியுள்ளது எடுத்து மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது பெரும்பாலான இடங்களில் காலை நேரங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த ஒரு வாரத்திற்கு பனிமூட்டம் நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் மட்டுமே மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் நிலவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உறைபனி நிலவக்கூடும்.
Join Our WhatsApp Channel ” for Latest Updates
சென்னை விப்ரோ கம்பெனியில் காத்திருக்கும் சூப்பர் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!