இந்தியாவில் வங்கி லாக்கர் தொடர்பான விதிகள் மாற்றம் – ஜன.01 முதல் அமல்! RBI அறிவிப்பு!
இந்தியாவில் வங்கி வாடிக்கையாளர்களின் லாக்கர் தொடர்பான விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் 2023 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி லாக்கர்:
இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வங்கிகளில் தங்களின் பணத்தை தவிர்த்து தங்க நகைகள் மற்றும் மிக முக்கிய சொத்து விவரங்களின் பத்திரங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவியாக வங்கிகள் லாக்கர் சேவையை வழங்கி வருகிறது. இந்த லாக்கர் தொடர்பான விதிமுறைகளை தற்போது மத்திய ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் லாக்கர் தொடர்பான புதிய விதிகள் 2023 ஜன- 1 முதல் அமல்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் லாக்கர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் முதலில் புதிய லாக்கர் விதிமுறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளின்படி விலை மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டாலோ அல்லது ஏதேனும் விபத்தால் அதனை இழக்க நேரிட்டாலோ வங்கியின் சார்பாக வாடிக்கையாளர்கள் பொருட்களுக்கு இணையாக இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம்.
ஆதார் அட்டை இருந்தால் மாதம் ரூ.3000.. வெளியான தகவல்.. மத்திய அரசு விளக்கம்!
Exams Daily Mobile App Download
மேலும் லாக்கரில் நடைபெறும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்கள் லாக்கர்களை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு SMS மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் லாக்கரை வாடகைக்கு எடுக்கும் போது மூன்று ஆண்டுகளுக்கான வாடகையை செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.