ஆதார் அட்டை இருந்தால் மாதம் ரூ.3000.. வெளியான தகவல்.. மத்திய அரசு விளக்கம்!
இந்தியாவில் ஆதார் அட்டை வைத்துள்ளவர்களுக்கு மத்திய அரசு ரூ.3000 வழங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து தற்போது மத்திய அரசு தெளிவாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
ஆதார்:
இந்தியாவில் இன்றைக்கு ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அன்றாட வாழ்வில் அலுவலகம் சார்ந்த வேலைகளுக்கும் பிற தனிப்பட்ட வேலைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த ஆதார் கார்டு மூலம் பல்வேறு மோசடிகளும் அரங்கேறி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் தற்போது ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் மாதம் ரூ. 3000 பெறலாம் என்ற தகவல் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்த வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து தற்போது மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசின் ரூ.1,000 பொங்கல் பரிசு உங்களுக்கு இருக்கா.. இல்லையா? தெரிஞ்சுக்க இதை பண்ணுங்க!
Exams Daily Mobile App Download
அதாவது ஆதார் கார்டு இருந்தால் மாதம் ரூ. 3000 பெறலாம் என்ற தகவல் முற்றிலும் போலியானது என்று தெரிவித்துள்ளது. இதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இது போன்ற தகவல் மோசடி கும்பலால் பரப்பப்பட்டு வருகிறது. இதனை நம்பி பணத்தை பெற நீங்கள் முயற்சித்தால் உங்களின் பணத்தை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.