அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – வீடு சென்று பொருட்கள் வழங்கும் திட்டம் ரத்து!
தேசிய தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கம் அறிமுகப்படுத்திய வீடு சென்று வழங்கும் ரேஷன் திட்டத்தை உயர்நீதிமன்றம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
ரேஷன் திட்டம் ரத்து
டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசாங்கம் மக்களுக்கு வீடு தேடி சென்று ரேஷன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் இடையே மோதல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதற்கான டெல்லி அரசின் முடிவை டெல்லி உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி தற்போது ரத்து செய்துள்ளார். அதாவது ரேஷன் திட்டத்தை எதிர்த்து, டெல்லி அரசின் ரேஷன் டீலர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவுக்கு இப்போது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – இந்த செயலி மூலம் எளிதாக அப்டேட் செய்யலாம்!
இதற்கு முன்னதாக, வீட்டுக்கு வீடு சென்று வழங்கப்படும் ரேஷன் திட்டத்தை எதிர்த்து ரேஷன் டீலர்கள் தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் உயர்நீதிமன்றம் அனுமதித்தது. இது தொடர்பான விசாரணையில், தற்காலிக தலைமை நீதிபதி விபின் சங்கி மற்றும் நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோர், ‘டெல்லி அரசுக்கு வீடு சென்று விநியோகிக்க வேறு எந்த திட்டத்தையும் கொண்டு வர சுதந்திரம் உள்ளது. ஆனால் வீடு வீடாக சென்று உணவு தானியங்களை விநியோகிக்க மத்திய அரசு வழங்கும் சலுகையை பயன்படுத்த முடியாது’ என்று தெரிவித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில், டெல்லி அரசு ரேஷன் டீலர்கள் சங்கம் தாக்கல் செய்த விண்ணப்பத்தின் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த ரேஷன் திட்டம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கிய ஒரு லட்சியத் திட்டம் ஆகும். ஆனால் இது தொடர்பாக மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையே குழப்பங்கள் உருவான நிலையில் தற்போது அந்த திட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது குறித்த ஒரு அறிக்கையின்படி, டெல்லியில் 72 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மானிய விலைக்கு ரேஷன் பெற தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.