சென்னை ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 13ம் தேதி கடைகள் அடைப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட்ட நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் 13 ஆம் தேதி ரேசன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர்.
ரேஷன் கடை போராட்டம்:
தமிழக அரசு சார்பில் கூட்டுறவு துறையின் கீழ் பல ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அரசுத் துறை ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர். நேற்று முதல் பல இடங்களில் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை.
பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர 30 மாவட்டங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் அமுதம், சிந்தாமணி, காமதேனு மற்றும் சுய உதவி குழு நடத்தும் கடைகளை தவிர்த்து 25 ஆயிரம் ரேசன் கடைகளில் உள்ள ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் 13 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
வடசென்னையில் 878 ரேசன்கடை, தென் சென்னையில் 888 கடை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 635, செங்கல்பட்டு மாவட்டத்தில் 841, திருவள்ளூர் மாவட்டத்தில் 1117 ரேசன் கடைகள் இருக்கும் நிலையில் போராட்டம் காரணமாக அந்த கடைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் தினேஷ்குமார் கூறுகையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதால் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும், வருகிற 13 ஆம் தேதி எங்களது சங்கமும், அண்ணா பணியாளர்கள் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு அனைத்து பணியாளர் சங்கமும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார்.