பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
பான் கார்டு எண்ணை உங்களுடைய ஆதார் கார்டு எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பை வெளியிட்டது. ஒவ்வொரு முறையும் அதற்கான கால அவகாசம் அதிகமாக நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது அறிவித்துள்ள அவகாசத்திற்குள் இணைக்கப்பட வில்லை என்றால் உங்கள் பான் கார்டு செய்யிழக்கப்பட்டுவிடும் என அறிவித்திருக்கிறது.
பான் கார்டு:
பான் கார்டை வைத்து ரூ. 5 லட்சம் அல்லது அதற்கு மேல் அசையா சொத்துக்கள் வாங்குவதற்கு, வாகனம் அல்லது மோட்டார் வாகனம் வாங்குவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு, வங்கியில் ரூபாய் 50000 க்கும் மேல் பிக்சட் டெபாசிட் செய்யவும், அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும் பிக்சட் டெபாசிட் ரூபாய் 50 ஆயிரத்தை தாண்டும் போது போன்ற செயல்களுக்கு இந்த பான் கார்டு பயன்படுகிறது. அதுமட்டுமின்றி, வங்கி கணக்கை துவங்கவும் பயன்பெறுகிறது. ஆகவே, இந்த பான் கார்டு ஆதார் கார்டு போலவே செயல்படுகிறது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்!
அதனைத்தொடர்ந்து, பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என சில வருடங்களுக்கு முன்னர் அரசு அறிவித்திருந்தது. அப்படி இணைக்கப்படவில்லை என்றால் அனைத்து பான் கார்டுகளும் செல்லாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் CBDT ஆல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மார்ச் மாதம் வரையும் பலர் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்காமல் இருந்தனர். ஆனால் இதற்கான கால அவகாசம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீடிக்கப்பட்டது. அதாவது, மார்ச் 31 2023 வரை ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணை இணைக்கலாம் என்று கூறப்பட்டது. அதனை தொடர்ந்து, பான்-ஆதார் இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் CBDT மார்ச் மாத இறுதியில் அறிவிப்பு வெளியிட்டது.
Exams Daily Mobile App Download
அதன்படி ஆதார் எண்ணை பான் கார்டுடன் ஜூன் 30ம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் வருமான வரி சட்டத்தின் படி ரூ. 500 அபராதம் செலுத்த வேண்டும் என அறிவித்திருந்தது. மேலும் ஜூலை 1-ஆம் தேதிக்கு மேலும் இணைக்க வில்லை என்றால் அபராதத் தொகை ரூ. 1000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் அபராதம் செலுத்த ITNS 280 என்ற செலான் எண்ணைப் பயன்படுத்தி அபராத தொகையை செலுத்தலாம். மேலும், அடுத்த மாதம் அபராதம் செலுத்த, ITNS 280 என்ற செலான் எண்ணைப் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.