இந்திய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய மாற்றம் ஒன்று வர இருக்கிறது.
ரேஷன் கடைகள்
நாடு முழுவதும் மக்களுக்கு உதவ ரேஷன் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு பொருள்கள் மட்டுமில்லாமல் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் கடைகளில் விநியோக நேரம் குறைவாக இருப்பதாக புகார் வந்த வண்ணம் இருக்கிறது. அதனால் ரேஷன் கடைகளுக்கு புதிய மாற்றம் ஒன்று வந்துள்ளது. அதாவது விற்பனையாளர்களின் கடைகளில் மின்னணு எடை இயந்திரங்கள் மூலம் ரேஷன் விநியோகம் செய்யப்படும். அதன் படி இயந்திரத்தில் இருந்து ரேஷன் அளவு கிடைத்தால் மட்டுமே சீட்டு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரியில் ரூ. 7.5 லட்சம் வரை விலக்கு – மத்திய பட்ஜெட்டில் தாக்கல்!!
இது குறித்து அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும் இதன் மூலம் வெளிப்படைத்தன்மை ஏற்படும் என எதிர்பார்ப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய மென்பொருள் கொண்ட இயந்திரங்களும் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் கார்டில் பதிவு செய்யப்பட்ட யூனிட் அளவின்படி மட்டுமே ரேஷன் விநியோகம் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் ரேஷன் கடைகளில் அளவு குறைவாக பொருள்கள் விற்பனை செய்வது உள்ளிட்ட புகார்களுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.